என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெவ்வேறு சம்பவங்களில் கார் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்18 April 2021 12:49 PM GMT (Updated: 18 April 2021 12:49 PM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கார் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள நெய்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 40). இவா் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ஜெயந்திக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணமாகி 3-வது மாதத்தில் ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டதாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று கடந்த 9-ந்தேதி தூத்துக்குடி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. அன்றைய தினத்தில் இருந்து அமல்ராஜ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. விவசாயி. இவருடைய மகன் செல்லத்துரை (24), எலக்ட்ரீசியன். இந்த நிலையில் செல்லத்துரை சம்பவத்தன்று தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X