என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு
Byமாலை மலர்17 April 2021 9:33 PM GMT (Updated: 18 April 2021 9:56 AM GMT)
அவினாசியில் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை சிலர் எடு்த்துச்சென்றனர். இதனால் அவினாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் போக்குவரத்து மிகுந்த ராஜன் நகர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச்சங்கம் எதிரில் நேற்றுகாலை ரூ.200, ரூ.500, ரூ.50 என ஏராளமான ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சிலர் ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசிச்சென்றது யார் என்பது தெரியவில்லை.
யாராவது மோட்டார்சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே போட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவை கள்ள நோட்டுகளாக இருந்தாலும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை. சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் நேற்று அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் போக்குவரத்து மிகுந்த ராஜன் நகர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச்சங்கம் எதிரில் நேற்றுகாலை ரூ.200, ரூ.500, ரூ.50 என ஏராளமான ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சிலர் ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசிச்சென்றது யார் என்பது தெரியவில்லை.
யாராவது மோட்டார்சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே போட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவை கள்ள நோட்டுகளாக இருந்தாலும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை. சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் நேற்று அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X