என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நண்பர்கள் அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 April 2021 1:49 AM GMT (Updated: 17 April 2021 1:49 AM GMT)
விழுப்புரம் அருகே வேலைக்கு சென்ற இடத்தில் நண்பர்கள் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 34). இவர் நண்பர்களுடன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சிவக்குமாரின் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
இது பற்றி உறவினர்கள் விசாரித்ததில், வேலைக்கு சென்ற சிவக்குமாரை, அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சாமிமலை, வெற்றி, வினோத் ஆகியோர் திட்டி, தாக்கி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து சிவக்குமாரின் மனைவி கீதா(29), கஞ்சனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் புதைக்கப்பட்ட சிவக்குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X