search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நெல்லை அருகே லாரி மோதி பெண் தபால் ஊழியர் பலி

    நெல்லை அருகே இன்று காலையில் லாரி மோதிய விபத்தில் பெண் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் திருவுடையார். இவரது மகள் அன்பரசி (வயது23).

    இவர் தேவர்குளம் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கமாக இவர் தினமும் வீட்டில் இருந்து மொபட்டில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை அவர் மொபட்டில் புறப்பட்டு சென்றார். அவர் சிற்றாற்று பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் சங்கரன் கோவிலில் இருந்து டவுனை நோக்கி சரக்குகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.

    எதிர்பாராத விதமாக மொபட் மீது லாரி மோதி அன்பரசி தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரியை ஓட்டி வந்த டவுனை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×