என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே லாரி மோதி பெண் தபால் ஊழியர் பலி
Byமாலை மலர்15 April 2021 11:18 AM GMT (Updated: 15 April 2021 11:18 AM GMT)
நெல்லை அருகே இன்று காலையில் லாரி மோதிய விபத்தில் பெண் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் திருவுடையார். இவரது மகள் அன்பரசி (வயது23).
இவர் தேவர்குளம் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கமாக இவர் தினமும் வீட்டில் இருந்து மொபட்டில் வேலைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை அவர் மொபட்டில் புறப்பட்டு சென்றார். அவர் சிற்றாற்று பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் சங்கரன் கோவிலில் இருந்து டவுனை நோக்கி சரக்குகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக மொபட் மீது லாரி மோதி அன்பரசி தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த டவுனை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் திருவுடையார். இவரது மகள் அன்பரசி (வயது23).
இவர் தேவர்குளம் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கமாக இவர் தினமும் வீட்டில் இருந்து மொபட்டில் வேலைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை அவர் மொபட்டில் புறப்பட்டு சென்றார். அவர் சிற்றாற்று பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் சங்கரன் கோவிலில் இருந்து டவுனை நோக்கி சரக்குகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக மொபட் மீது லாரி மோதி அன்பரசி தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த டவுனை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X