என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ் மோதி அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலி
Byமாலை மலர்13 April 2021 2:25 PM GMT (Updated: 13 April 2021 2:25 PM GMT)
கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் ஜவகர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமார் (வயது 38). இவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் கடையநல்லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடையநல்லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார். குத்துக்கல்வலசை அருகே சென்றபோது செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X