என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு
Byமாலை மலர்12 April 2021 4:34 PM GMT (Updated: 12 April 2021 4:34 PM GMT)
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வன்னியர் சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக போராட்டம் நடத்தியது. அதன்பின் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் தமிழக சட்டசபையில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்தச் சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
தேர்தலின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இது தற்காலிகமானது எனக் கூறினர். ஆனால் முதல்வர் சட்டத்தில் தற்காலிக சட்டம், நிரந்தர சட்டம் எனக் கிடையாது என்றார். முதலமைச்சரே உறுதி செய்துவிட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X