என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
Byமாலை மலர்12 April 2021 2:01 PM GMT (Updated: 12 April 2021 2:01 PM GMT)
திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணிடம் சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பிரமன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது42). இவரது மனைவி பழனிபாப்பா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பழனிபாப்பா குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்த மர்மநபர்கள் பழனிபாப்பாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடினர்.
அப்போது கண்விழித்த பழனிபாப்பாவும், அவரது மகன்களும் கூச்சலிட்டனர். இதனை அறிந்த ஊர்மக்கள், இளைஞர்கள் தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க விரட்டினர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் வயல்வெளியில் பதுங்கி இருந்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை அருகே உள்ள மானோஜி பட்டியை சேர்ந்த நாகப்பன் (வயது 43), பரமசிவம் (41), கணேசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் கணேசன் தப்பி ஓடிவிட்டார். இந்த 3 பேர் மீதும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சங்கிலியை பறிமுதல் செய்தனர். துணிச்சலுடன் நள்ளிரவில் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்த பொதுமக்களை பலரும் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X