என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 April 2021 9:32 AM GMT (Updated: 12 April 2021 9:32 AM GMT)
நாமக்கல் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு. சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல், மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 5-ந் தேதி சுரேஷூக்கும், அவரது மனைவி மஞ்சுவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இரவு படுக்கை அறைக்கு சென்ற சுரேஷ், மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த மஞ்சு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் சுரேசை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X