search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொட்டியம் அருகே லாரி- சரக்கு வேன் மோதல் - பெண் உள்பட 2 பேர் பலி

    தொட்டியம் அருகே லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலை ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த சரக்கு வேனை டிரைவர் சந்திரசேகர்(வயது 45) ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சரக்கு வேன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் நாமக்கல் அருகே பேளூகுறிச்சி சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு அந்த சரக்கு வேனில் வந்த முசிறியை சேர்ந்த கந்தசாமியின் மனைவி வேணி(55), டிரைவர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    மேலும் லால்குடி இடையாத்திமங்களம் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி(40), உறையூர் சோழராஜாபுரத்தை சேர்ந்த ஹரிணி(17), பழனியம்மாள்(65), முசிறி வெள்ளூர் சத்திரம் பகுதியை சேர்ந்த இந்துமதி(38), ெநம்பர் 1 டோல்கேட் பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயமணி(60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×