search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thottiyam accident"

    தொட்டியம் அருகே கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொட்டியம்:

    நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டியை சேர்ந்தவர் நவநீதக்குமார் (36). இவர் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று நவநீதக்குமார் தனது மொபட்டில் வலைப்பட்டியில் இருந்து திருச்சி-நாமக்கல் சாலையில் மேய்க்கல்நாய்க்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியம் அடுத்த வாள்வேல் புத்தூர் பிரிவு ரோடு அருகே வந்த போது தஞ்சாவூரில் இருந்துபெங்களூரு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இந்த விபத்தில் நவநீதக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×