என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே 15 வயது மகளை வாலிபர் கடத்தி சென்றதாக தந்தை புகார்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுக்கும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, காரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தந்தை இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஒரத்தநாடு போலீசார் கூறியதாவது:-
இளம்பெண்ணின் அக்கா கணவர் மற்றும் அஜித்குமார் இருவரும் நண்பர்கள். இதனால் அடிக்கடி அஜித்குமார் அவர்களது வீட்டிற்கு வந்து சென்ற போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாக தெரியவருகிறது என்றனர்.
இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்