search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    போதிய வருமானம் இல்லாததால் கார் டிரைவர் தற்கொலை

    கோவை கிணத்துக்கடவு பகுதியில் போதிய வருமானம் இல்லாததால் தைலத்தை குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் ரவிகுமார் (42). கார் டிரைவர். இவருக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்தார். மேலும் கார் வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த நீலகிரி தலைவலி தைலத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை வடவள்ளி நியூ தில்லை நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா (33). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்தநிலையில் அருண்குமார் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×