search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவேங்கடம் அருகே இரண்டு குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    திருவேங்கடம் அருகே இரண்டு குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவேங்கடம்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் தங்கமலை (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு காளீஸ்வரி (28) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தங்கமலைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று காளீஸ்வரி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×