search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கோவில்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த புதுப்பெண்- உதவி கலெக்டர் விசாரணை

    கோவில்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் கிணற்றில் புதுப்பெண் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (வயது 35). இருச்சக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், சென்னையை சேர்ந்த தர்மராஜ்- இன்னாசி அம்மாள் தம்பதிகளின் மகள் வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் மரிய அந்தோணி ராஜ் தனது மனைவி வின்சென்ட் மேரியுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது வின்சென்ட் மேரி கிணற்றில் குதித்து விட்டாராம். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் இரவில் வின்சென்ட் மேரியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வின்செண்ட் மேரி தாயார் இன்னாசி அம்மாள், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கொப்பம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வின்சென்ட் மேரி திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆவதால், அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×