என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த புதுப்பெண்- உதவி கலெக்டர் விசாரணை
Byமாலை மலர்4 April 2021 3:33 PM GMT (Updated: 4 April 2021 3:33 PM GMT)
கோவில்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் கிணற்றில் புதுப்பெண் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (வயது 35). இருச்சக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், சென்னையை சேர்ந்த தர்மராஜ்- இன்னாசி அம்மாள் தம்பதிகளின் மகள் வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் மரிய அந்தோணி ராஜ் தனது மனைவி வின்சென்ட் மேரியுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது வின்சென்ட் மேரி கிணற்றில் குதித்து விட்டாராம்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் இரவில் வின்சென்ட் மேரியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வின்செண்ட் மேரி தாயார் இன்னாசி அம்மாள், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கொப்பம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வின்சென்ட் மேரி திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆவதால், அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X