search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் மரணம்"

    • மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர்.
    • கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் மிருதுளா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆவதால் வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரிய கோமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருண்குமார் (வயது22) இவர் கேரளாவில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மாமா சேலத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் வீரவர் கோவிலில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மிருதுளா இன்று காலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுப்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் மிருதுளா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆவதால் வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ×