search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்- உதவி கலெக்டர் விசாரணை
    X

    திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்- உதவி கலெக்டர் விசாரணை

    • போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் மிருதுளா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆவதால் வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரிய கோமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருண்குமார் (வயது22) இவர் கேரளாவில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மாமா சேலத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் வீரவர் கோவிலில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மிருதுளா இன்று காலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுப்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் மிருதுளா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆவதால் வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×