என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யம்பேட்டை அருகே ஓடும் பஸ்சில் நகை திருடிய அக்காள், தங்கை கைது
Byமாலை மலர்4 April 2021 9:52 AM GMT (Updated: 4 April 2021 9:52 AM GMT)
அய்யம்பேட்டை அருகே ஓடும் பஸ்சில் நகை திருடிய அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை:
கபிஸ்தலம் அருகே கருப்பூர் குடியான தெருவை சேர்ந்தவர் வேலவன் (வயது 47). விவசாயி. இவர் சம்பவத்தன்று தஞ்சையிலிருந்து பாபநாசம் நோக்கி ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அய்யம்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது வேலவன் கையில் வைத்திருந்த பையை யாரோ திறப்பது போல் இருந்து திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். அப்போது இரண்டு பெண்கள் இவர் பையில் வைத்திருந்த மணி பர்சை எடுத்து அதில் அவர் வைத்திருந்த கை செயினை திருடி கொண்டிருந்தனர். இதையடுத்து வேலவன் கூச்சலிடவே சக பயணிகள் அந்த இரண்டு பெண்களையும் பிடித்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டியை சேர்ந்த மஞ்சுளா (50), மீனா (40) என்பதும், இருவரும் அக்காள் தங்கைகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே கருப்பூர் குடியான தெருவை சேர்ந்தவர் வேலவன் (வயது 47). விவசாயி. இவர் சம்பவத்தன்று தஞ்சையிலிருந்து பாபநாசம் நோக்கி ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அய்யம்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது வேலவன் கையில் வைத்திருந்த பையை யாரோ திறப்பது போல் இருந்து திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். அப்போது இரண்டு பெண்கள் இவர் பையில் வைத்திருந்த மணி பர்சை எடுத்து அதில் அவர் வைத்திருந்த கை செயினை திருடி கொண்டிருந்தனர். இதையடுத்து வேலவன் கூச்சலிடவே சக பயணிகள் அந்த இரண்டு பெண்களையும் பிடித்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டியை சேர்ந்த மஞ்சுளா (50), மீனா (40) என்பதும், இருவரும் அக்காள் தங்கைகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X