search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரத்தில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், ஜாபர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரான பேகம்பூர் ஜமால் தெருவை சேர்ந்த ராஜாமுகமதுவை (வயது 50) கைது செய்தனர்.
    Next Story
    ×