search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் 27.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் 63-வது நாளாக நேற்று 4,773 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் 63-வது நாளாக நேற்று 4,773 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 814 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 374 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 233 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 130 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 19 ஆயிரத்து 77 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 27 லட்சத்து 53 ஆயிரத்து 823 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    Next Story
    ×