search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.பாலசுந்தரம் குக்கர் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தபோது எடுத்த படம்.
    X
    ஆர்.பாலசுந்தரம் குக்கர் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தபோது எடுத்த படம்.

    கோலியனூர் ஒன்றியத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம் வாக்கு சேகரிப்பு

    கோலியனூர் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுந்தரம் வாக்கு சேகரித்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் நேற்று கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாலையாம்பாளையத்தில் வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம் அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் பிரசாரத்தை தொடங்கி பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    அதனை தொடர்ந்து தாதம்பாளையம், சேர்ந்தனூர், குச்சிப்பாளையம், பில்லூர், அரசமங்கலம், ஜானகிபுரம், கொளத்தூர், காவணிப்பாக்கம், திருப்பாச்சனூர், தளவானூர், வி.அரியலூர், சித்தாத்தூர் ஆகிய கிராமங்களில் வீதி, வீதியாக திறந்தவேனில் சென்று வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம், பிரசாரம் செய்து பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பெண்கள் சிலர், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    இந்த பிரசார நிகழ்ச்சியில் கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், சரவணன், தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளர் தேசம் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், விழுப்புரம் நகர அ.ம.மு.க. செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×