என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்20 March 2021 3:58 PM GMT (Updated: 20 March 2021 3:58 PM GMT)
ராஜாக்கமங்கலம் அருகே விஷ மாத்திரைகளை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே கார்த்திகை வடலியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருடைய மகள் அபி சக்தி ராணி (வயது 19). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் படிப்பை பாதியில் கைவிட்டு வேலைக்கு செல்கிறேன் என அபி சக்தி ராணி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மகளின் முடிவுக்கு பெற்றோர் அனுமதி அளிக்கவில்லை என்றும், கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அபி சக்தி ராணி விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X