search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ மாத்திரை"

    • பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
    • பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). இவர் அருகில் உள்ள பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இவர் வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவரது தோட்டத்தில் விஷ மருந்தை சாப்பிட்டு உயிருக்கு போரா டிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் அவரது மகன் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தவர் காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்கோடம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேசன்(வயது 55) என்பதும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது கால் சட்டை பையில் தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • முதியவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் காட்டு விளையை சேர்ந்தவர் சேசையன் (வயது 72). மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீராததால் அவதிப்பட்டு வந்த சேசையன் சம்பவத்தன்று மாலை விஷ மாத்திரை தின்று வீட்டு மாடிக்கு சென்றார். அங்கு வாந்தி எடுத்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேசையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஆல்பர்ட் ராஜுவ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பழனிசாமி (64). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியே சென்று விட்டார். இதனால் பழனிசாமி வேதனையடைந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×