search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சரக்கு ரெயில் மோதி வாலிபர் பலி

    சரக்கு ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் சேலம் பைபாஸ் சாலை அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வாலிபர் தனது இடது கையில் பிரியா என்றும் வலது கையில் சிங்கம் பாய்ந்து வருவது போல் பச்சை குத்தி உள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த டீசட்டில் தொட்டியம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றையும் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×