என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் மருந்தக குடோனின் பூட்டை உடைத்து ரூ.76 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்9 March 2021 6:59 AM GMT (Updated: 9 March 2021 6:59 AM GMT)
பெரம்பலூரில் மருந்தக குடோனின் பூட்டை உடைத்து ரூ.76 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம் உறையூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 56). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து, அதில் மருந்தக குடோன் வைத்துள்ளார். மேலும் அங்கிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு மருந்துகள் வினியோகித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மருந்தக குடோனை, அதன் மேலாளர் பெரம்பலூரை சேர்ந்த இளங்கோ பூட்டிவிட்டு வீடு திரும்பினார். நேற்று காலை அவர் அங்கு வந்து பார்த்தபோது மருந்தக குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.76 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது, தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மருந்தக குடோன் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது, அதில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து போலீசார் அந்த மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 56). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து, அதில் மருந்தக குடோன் வைத்துள்ளார். மேலும் அங்கிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு மருந்துகள் வினியோகித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மருந்தக குடோனை, அதன் மேலாளர் பெரம்பலூரை சேர்ந்த இளங்கோ பூட்டிவிட்டு வீடு திரும்பினார். நேற்று காலை அவர் அங்கு வந்து பார்த்தபோது மருந்தக குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.76 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது, தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மருந்தக குடோன் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது, அதில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து போலீசார் அந்த மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X