என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கிய 4 பேர் கைது
Byமாலை மலர்4 March 2021 1:23 PM GMT (Updated: 4 March 2021 1:23 PM GMT)
பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அத்தியூர் கீழ ராஜவீதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அருண் (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஓட்டலில் சைனீஸ் உணவு வகை தயாரிக்கும் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை பாலக்கரையில் உள்ள பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அருணை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அருண் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி விட்டனர். பின்னர், படுகாயமடைந்த அருணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது, அவர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த சார்லஸ் மகன் வினோத்(26) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து, வினோத்தை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தப்பி ஓடிய கல்பாடி வடக்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் கமல்ஹாசன் (26), நெடுவாசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த் (21), சங்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X