என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீரிப்பாறை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி கைது
Byமாலை மலர்2 March 2021 11:24 AM GMT (Updated: 2 March 2021 11:24 AM GMT)
கீரிப்பாறை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 32), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
முருகன், ஒரு பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இதை அறிந்த குடும்பத்தினர் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே முருகன் அந்த மாணவியுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, முருகன், அந்த மாணவியுடன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே, போலீசார் கேரளாவுக்கு சென்று மாணவியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அத்துடன் முருகனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், முருகனை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X