search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிட மாற்றம்
    X
    பணியிட மாற்றம்

    மேற்கு மண்டலத்தில் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

    மேற்கு மண்டலத்தில் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    கோவை:

    கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்க ளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 35 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கோவை காட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா திருப்பூர் மாநகருக் கும், வெறைட்டிஹால் ரோடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பர்வீன்பானு சேலம் மாநகருக்கும், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி சேலம் மாநகருக்கும், உக்கடம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் கோவை சரகத்துக்கும், ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கோவை சரகத்துக்கும்,

    சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா கோவை சரகத்துக்கும், சரவணம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா சேலம் சரகத்துக்கும், கோவை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி கோவை சரகத்துக்கும், கோவை மாநகர எஸ்.சி.எஸ். பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேலம் சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ சேலம் சரகத்துக்கும், கோவை மாநகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோதிமணி திருப்பூர் மாநகருக்கும், திருப்பூர் மாநகர ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி கோவை மாநகருக்கும், திருப்பூர் மாநகர் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம் கோவை மாநகருக்கும், சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சுந்தராம்பாள் சேலம் சரகத்துக்கும்,

    சேலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி கோவை சரகத்துக்கும், சேலம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வேதாபிறவி சேலம் சரகத்துக்கும், சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சேலம் சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சேலம் மாநகரம் இன்ஸ்பெக்டர் சரோஜா, சேலம் வெடிகுண்டு தடுப்பு இன்ஸ்பெக்டர் விஜயா, சேலம் மாநகரம் இன்ஸ்பெக்டர் இந்திரா, சேலம் இன்ஸ்பெக்டர் பாபு, நீலகிரி மாவட்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நீலகிரி மாவட்டம் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை ஆகியோர் கோவை மாநகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி சேலம் மாநகருக்கும், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சேலம் மாநகருக்கும், நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சேலம் மாவட்ட இன்ஸ்பெக்டர் குலசேகரன், சேலம் சரகம் இன்ஸ்பெக்டர் சாந்தாம்மாள் கோவை மாநகருக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி சேலம் மாநகருக்கும், நாமக்கல் மாவட்டம் ஈச்சம்பாளையம் இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கே.சாந்தா, நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ கோவை மாநகருக்கும், திருப்பூர் மாநகரம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகிராம் கோவை மாநகருக்கும், கோவை மாநகரம் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சரவணன் திருப்பூர் மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தினகரன் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×