என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளக்கோவில் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வளசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேசன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் டிரைவராக உள்ளார்.
இந்தநிலையில் கணேசன் நத்தகடையூரில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் உறவினரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் 2 அறையில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
கணேசன் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து கணேசன் வெள்ளக்கோவில் போலீசில் புகார் அளித்தார். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்