search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கலவை அருகே பனைமரங்களில் இருந்து ‘கள்’ இறக்கி விற்ற 2 பேர் கைது

    கலவை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனைமரங்களில் இருந்து ‘கள்’ இறக்கி விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பொன்னமங்கலம், கன்னிகாபுரம், ஆரூர், சஞ்சீவ்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள பனைமரங்களில் இருந்து ‘கள்’ இறக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பூர்ணிமா தலைமையில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வாழப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் மேற்கண்ட கிராமங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள பனைமரங்களில் இருந்து ‘கள்’ இறக்கி விற்பனை செய்த கன்னியப்பன் (வயது 55), சகாதேவன் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள பனைமரங்களில் மாட்டப்பட்டு இருந்த 50 பானைகளை உடைத்து, அதிலிருந்த 100 லிட்டர் கள்ளை கீழே கொட்டி அழித்தனர்.
    Next Story
    ×