என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்ச் 28-ந்தேதி முதல் திருச்சி-புதுடெல்லி இடையே மீண்டும் நேரடி விமான சேவை
Byமாலை மலர்21 Feb 2021 6:18 PM GMT (Updated: 21 Feb 2021 6:18 PM GMT)
திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடா்ந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் இயக்கப்படும் இந்த விமானம் திருச்சியில் இருந்து தினமும் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக மதியம் 12.45 மணிக்கு புதுடெல்லியை சென்றடையும். பின்னர் புதுடெல்லியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடா்ந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் இயக்கப்படும் இந்த விமானம் திருச்சியில் இருந்து தினமும் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக மதியம் 12.45 மணிக்கு புதுடெல்லியை சென்றடையும். பின்னர் புதுடெல்லியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X