என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பாட்டி, பேத்தி கடத்தி கொலை
தென்காசி:
இவரது மனைவி கோமதி அம்மாள் (வயது55). இவர்களது மகள் சீதா என்ற சுப்புலட்சுமி. இவருக்கும் தென்காசி அருகே உள்ள கடப்போ கத்தி பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் உத்ரா என்ற சாக்ஷி (1½).
முருகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது மனைவி சுப்புலட்சுமி தனது மகளுடன் தாய் வீடான கடப்போ கத்தியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் கோமதி மற்றும் அவரது பேத்தி சாக்ஷி ஆகியோர் காணவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் முருகன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தனது குழந்தை மற்றும் மாமியார் மாயமானது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோமதி, சாக்ஷியை தேடி வந்தனர். இது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோமதி அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பி கேட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கோமதி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கோமதி மற்றும் அவரது பேத்தியை கடத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பாட்டி மற்றும் பேத்தியின் உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை அடுத்த முத்துமாலைபுரத்தில் காட்டு பகுதியில் வீசியதும் தெரிய வந்தது.
இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற குற்றாலம் போலீசார் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த 2 பேரின் உடலையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், குற்றாலம் இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களும் அங்கு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்