என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் வாழைஇலை விலை கிடு,கிடு உயர்வு
Byமாலை மலர்19 Feb 2021 8:29 PM GMT (Updated: 19 Feb 2021 8:29 PM GMT)
வரத்து குறைவால் திண்டுக்கல்லில் வாழைஇலை விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் குடகனாறு சுற்று வட்டார பகுதிகளான சித்தையன்கோட்டை, மைலாப்பூர், ஆத்தூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
ஆனால் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வாழை மரங்கள், இலைகள் அதிக அளவில் சேதமடைந்தன. இதனால் திண்டுக்கல்லில் உள்ள வாழை இலை மொத்த விற்பனை கடைகளுக்கு வரத்து குறைந்தது.
இதன் காரணமாக இலைகளின் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்ட 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு, தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X