search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேர்ந்து வாழ மறுப்பு - காதல் கணவரை நடுரோட்டில் அடித்து உதைத்த இளம்பெண்

    நாகர்கோவில் அருகே சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த காதல் கணவரை நடுரோட்டில் வைத்து இளம்பெண் அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். அங்கு காரைக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பணியாற்றினார்.

    இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்தனர்.

    இதில் இளம்பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து பட்டதாரி வாலிபர் தனது காதலியிடம் கர்ப்பமான தகவல் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும். எனவே அதை கலைத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

    இளம்பெண் கர்ப்பத்தை கலைத்துள்ளார். பின்னர் தனதுதந்தையிடம் காதல் விவரத்தை தெரிவித்தார். திருமணம் செய்தால் காதலனைதான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் நாகர்கோவிலில் வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட் டது. இந்த நிலையில் இளம்பெண் காரைக்குடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார்.

    நேற்று மாலை மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்தார். கணவர் வீட்டிற்கு சென்றபோது அவரை கணவர் வீட்டார் அங்குள்ள அறை ஒன்றில் பூட்டி வைத்ததாக தெரிகிறது. அறையில் இருந்து தப்பித்த இளம்பெண், அதுபற்றி புகார் செய்ய கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    மனைவி போலீஸ் நிலையம் சென்றதை அறிந்து அவரது கணவரும் போலீஸ் நிலையம் சென்றார். கணவரை கண்டதும் அவரது காதல் மனைவி அவரிடம் சென்று தன்னோடு சேர்ந்து வாழ வருமாறு கேட்டார். மேலும் இருவரும் காதலித்தபோது நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். அதோடு கணவரை கட்டிப்பிடித்து உங்களை விட்டு பிரிந்து செல்லமாட்டேன் என்று கூறியபடி திடீரென கணவரை போலீஸ் நிலை யத்தில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

    இதைப்பார்த்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்கள். இருவரும் போலீஸ் நிலையத்தை விட்டு ரோட்டிற்கு வந்தனர். அங்கும் அந்த பெண் கணவரை சரமாரியாக தாக்கினார்.

    இதனை ரோட்டில் சென்றவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். போலீஸ் நிலையம் முன்பு கூட்டம் கூடத்தொடங்கியது. இதற்கிடையே இளம்பெண் தாக்கியதில் கணவனுக்கு ரத்தம் வரத்தொடங்கியது.

    அதை பார்த்ததும் இளம்பெண் கணவரை ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று பாசத்துடன் அழைத்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஜோடியாக புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்டார் பகுதியில் நேற்றிரவு 1 மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×