search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி 2-வது காலனியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 60). இவர் நேற்று மதியம் காலனிக்கு எதிரே பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தென்னரசு மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×