என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பாஸ்டேக்’ கட்டாயம் எதிரொலி: கயத்தாறு சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் - பயணிகள் கடும் அவதி
Byமாலை மலர்17 Feb 2021 3:47 PM GMT (Updated: 17 Feb 2021 3:47 PM GMT)
பாஸ்டேக் கட்டாயம் எதிரொலியாக கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் பாஸ்டேக் கட்டணம் முறை கட்டாயம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பாஸ்டேக் கட்டணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்த வண்ணம் இருந்தது. இதனால் வாகனங்களில் வந்த பலர் காலதாமதமாக சென்றதை பார்க்க முடிந்தது.
இதற்கிடையே, சுங்கச்சாவடியில் தனியார் கம்பெனிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சில வாகன ஓட்டிகள் அந்த ஸ்டிக்கர்களை வாங்கிச் சென்றனர்.
நெல்லையில் இருந்து கோவை, மதுரை சென்ற 2 அரசு பஸ்களில் பாஸ்டேக் கட்டணம் போதிய இருப்பு இல்லாததால், அவை தடுத்து நிறுத்தப்பட்டன. சுங்கச்சாவடி அதிகாரிகளிடம், போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பஸ்கள் புறப்பட்டு சென்றன. சுமார் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டதால், பஸ்களில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X