என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Byமாலை மலர்17 Feb 2021 12:51 PM GMT (Updated: 17 Feb 2021 12:51 PM GMT)
சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலியமங்கலம்:
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பச்சக்கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது61). இவர் அந்த பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சாலியமங்கலம் தோப்புத்தெருவில் பட்டாசு வெடித்தார். அப்போது நெருப்பு துகள்கள் அருகே உள்ள வீட்டு கூரையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அந்த வீட்டில் வசிக்கும் சுப்பிரமணியன் (65) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வத்தை, சுப்பிரமணியன் கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அருகிலிருந்தோர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X