search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்கரி
    X
    நிதின் கட்கரி

    சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்துவருகிறது - நிதின் கட்கரி

    சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது. எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    பாஸ்டேக் முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

    இந்நிலையில், சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறிய அவர், சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், இது ரூ.1.25 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவில் 81% லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குகிறோம். லித்தியம் அயனுக்கு மாற்றாக எனது அமைச்சகம் இன்று முன்முயற்சி எடுத்து வருகிறது. அரசு ஆய்வகங்கள் தொடர்பான அனைத்தும் ஆராய்ச்சி நடந்து வருகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களை உருவாக்க அமைச்சகம் முயற்சிக்கிறது.

    மாற்று எரிபொருளுக்காக நாடு செல்ல வேண்டிய நேரம் இது என்பது எனது பரிந்துரை. இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் நான் ஏற்கனவே மின்சாரத்தை எரிபொருளாக்க பிரசாரம் செய்கிறேன்.

    மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கழிவுநீரை கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 
    Next Story
    ×