என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆ.ராசா, சேகர் பாபு ஆ.ராசா, சேகர் பாபு](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102161408162231_Tamil_News_Tamil-News-Rasa-Sekar-Babu-Police-file-case_SECVPF.gif)
அனுமதி இல்லாமல் பிரசார பேரணி- ஆ.ராசா, சேகர் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராயபுரம்:
தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ‘விடியலை நோக்கி’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொது செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா, துறைமுகம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறைமுகம் தொகுதியில் பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வேனில் சென்று பிரசாரம் செய்தனர். வேனை தொடர்ந்து கார்கள், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் சென்றனர்.
இந்தநிலையில் ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் மீது முத்தியால்பேட்டை, யானைகவுனி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றது ஆகியவற்றுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)