search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலர் தினத்தையொட்டி கொடைக்கானல் பூங்காக்களில் வலம் வந்த காதல் ஜோடிகளை காணலாம்.
    X
    காதலர் தினத்தையொட்டி கொடைக்கானல் பூங்காக்களில் வலம் வந்த காதல் ஜோடிகளை காணலாம்.

    காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த காதல் ஜோடிகள்

    காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.
    கொடைக்கானல்:

    காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை கொண்டாடுவதற்காக, கடந்த 2 நாட்களாக காதல் ஜோடிகள் கொடைக்கானல் நகரில் முகாமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் ஒருவருக்கொருவர் பூங்கொத்துகளை கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். அத்துடன் நகரிலுள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா செட்டியார்பூங்கா போன்றவற்றில் உற்சாகமாக உலா வந்து பொழுதுபோக்கினர்.

    இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் களை கட்டின. மேலும் வார விடுமுறை காரணமாக காதல் ஜோடிகள் தவிர சுற்றுலா பயணிகளும் தம்பதிகளாக ஏராளமானவர்கள் வருகை புரிந்தனர். இதன் காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் நிரம்பி வழிந்தன.

    மேலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இருப்பினும் சுற்றுலா இடங்கள் வாகன நெரிசலால் திணறியது.
    Next Story
    ×