என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருசநாடு அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
Byமாலை மலர்13 Feb 2021 2:26 PM GMT (Updated: 13 Feb 2021 2:26 PM GMT)
வருசநாடு அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருசநாடு போலீசார் நேற்று மோப்ப நாய் உதவியுடன் சிங்கராஜபுரம் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரது வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் முன்புற வாசலில் பள்ளம் தோண்டி அதில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதை மோப்பநாய் கண்டுபிடித்தது. இதையடுத்து அந்த இடத்தில் தோண்டிய போலீசார் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த வினோத்காம்பிளி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X