search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
    X
    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

    வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்- தலைமை தேர்தல் ஆணையர்

    கொரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ந்தேதியுடன் முடிவடைகிறது.

    * தமிழகத்தில் எப்போதும் போல் வரும் தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம்.

    * புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளோம்.

    * ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    * வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    * 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

    * 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து  ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

    * கொரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

    * தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    * தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    * தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000யில் இருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளது.

    * வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். சிறப்பு பார்வையாளர்களாக இரண்டு பேர் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×