search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    சென்னையில் 148 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ்  பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 531 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 4
    செங்கல்பட்டு - 48
    சென்னை - 148
    கோவை - 57
    கடலூர் - 10
    தர்மபுரி - 2
    திண்டுக்கல் - 2
    ஈரோடு - 20
    கள்ளக்குறிச்சி - 3
    காஞ்சிபுரம் - 14
    கன்னியாகுமரி - 10
    கரூர் - 8
    கிருஷ்ணகிரி - 9
    மதுரை - 9
    நாகை - 8
    நாமக்கல் - 6
    நீலகிரி - 12
    பெரம்பலூர் - 1
    புதுக்கோட்டை - 6
    ராமநாதபுரம் - 0
    ராணிப்பேட்டை - 3
    சேலம் - 21
    சிவகங்கை - 2
    தென்காசி - 1
    தஞ்சாவூர் - 7
    தேனி - 1
    திருப்பத்தூர் - 1
    திருவள்ளூர் - 28
    திருவண்ணாமலை - 2
    திருவாரூர் - 2
    தூத்துக்குடி - 2
    திருநெல்வேலி - 8
    திருப்பூர் - 21
    திருச்சி - 9
    வேலூர் - 18
    விழுப்புரம் - 1
    விருதுநகர் - 3

    உள்நாட்டு விமானநிலையம் - 2

    மொத்தம் - 509
    Next Story
    ×