search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கோவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 90 பேர் கைது

    கோவை அருகே மேம்பால கட்டுமான பணியை தொடங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஹோப்காலேஜ்-தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி இல்லை. இருப்பினும் நேற்று மாலை ஏராளமான தி.மு.க.வினர் ஹோப்காலேஜ் ஐ.டி.பார்க் அருகில் குவிந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.12 கோடி செலவில் இந்த ரெயில்வே கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டும்பணி தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    எனவே இந்த மேம்பால பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×