என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்
Byமாலை மலர்29 Jan 2021 3:11 AM GMT (Updated: 29 Jan 2021 3:11 AM GMT)
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குறித்த நேரமான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம்.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் அணையை ஒட்டி அமைந்துள்ள சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வரும். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
இதுவரை டெல்டா பாசனத்திற்காக 165 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் நேற்று காைல நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,069 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குறித்த நேரமான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம்.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் அணையை ஒட்டி அமைந்துள்ள சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வரும். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
இதுவரை டெல்டா பாசனத்திற்காக 165 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் நேற்று காைல நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,069 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X