search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து

    பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×