என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்தது - தொழிலாளி படுகாயம்
Byமாலை மலர்26 Jan 2021 8:02 AM GMT (Updated: 26 Jan 2021 8:02 AM GMT)
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மோதிய ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்ததில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
ராஜாக்கமங்கலம்:
நாகர்கோவிலை அடுத்த வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42), தொழிலாளி. இவர் அனந்தநாடார்குடி அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அத்துடன் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த உடைந்த கம்பவுண்டு சுவரில் புகுந்து நின்றது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடைேய ஆட்டோ டிரைவர் வைராகுடியிருப்பை சேர்ந்த பிஜு (28) இறங்கி தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து தொடர்பாக ஆட்டோ டிரைவர் பிஜு மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X