search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சேலத்தில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

    சேலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சூரமங்கலம்:

    சேலம் மாமாங்கம் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). மெக்கானிக். இவருடைய மனைவி சுதா. மகன் கார்த்திகேயன். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். முருகேசனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. 

    இந்தநிலையில் வீட்டில் குளியல் அறைக்கு சென்ற முருகேசன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×