என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வகுப்பால் கடைக்கு செல்ல மறுப்பு - தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்16 Jan 2021 8:37 PM GMT (Updated: 16 Jan 2021 8:37 PM GMT)
ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி கடைக்கு செல்ல மறுத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டெபி கிராப் (வயது 19). இவர், அண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் ஸ்டெபி கிராபின் தாயார் ஸ்டெல்லா மேரி, மகளிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி வரும்படி கூறினார். அதற்கு ஸ்டெபி கிராப், எனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் கடைக்கு போக முடியாது என மறுத்தார்.
இதனால் ஸ்டெல்லா மேரி, மகளை கண்டித்து விட்டு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது தனது மகள் ஸ்டெபி கிராப், வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், ஸ்டெபி கிராப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டெபி கிராப் (வயது 19). இவர், அண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் ஸ்டெபி கிராபின் தாயார் ஸ்டெல்லா மேரி, மகளிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி வரும்படி கூறினார். அதற்கு ஸ்டெபி கிராப், எனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் கடைக்கு போக முடியாது என மறுத்தார்.
இதனால் ஸ்டெல்லா மேரி, மகளை கண்டித்து விட்டு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது தனது மகள் ஸ்டெபி கிராப், வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், ஸ்டெபி கிராப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X