என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தை மீது வழக்கு
Byமாலை மலர்16 Jan 2021 11:24 AM GMT (Updated: 16 Jan 2021 11:24 AM GMT)
ராமநாதபுரம் அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தை தொடர்பான விவாகரத்து வழக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது மகள் என்றும் பாராமல் தந்தை தனக்கு பாலியல் தொல்லை செய்ய முயன்றதாக பரபரப்பு புகார் தெரிவித்தாள்.
இந்த புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடுவர் நீதிபதி சிறுமியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சிறுமி தந்தையே தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்று வந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளாள். இதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக 44 வயதான தந்தை மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X