search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலியோ சொட்டு மருந்து முகாம் 31-ந்தேதிக்கு மாற்றம்

    கொரோனா தடுப்பூசி பணிகளால் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது.
    சென்னை:

    5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

    நாளை (16-ந்தேதி) நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி (ஞயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார். இதேபோல் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
    Next Story
    ×